சுற்றலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு தடை – வெள்ளப்பெருக்கு எதிரொலி!!
தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்திருந்தாலும், பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது கும்பக்கரை பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
தமிழகத்தில் கனமழை:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது. ஆரம்பத்தில், வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தான் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இவ்வாறாக இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – முக ஸ்டாலினுடன் தலைமை செயலர் சந்திப்பு!
இப்படியாக இருக்க, தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கனமழை பெய்த காரணமாக கும்பக்கரையில் உள்ள அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மக்கள் இந்த அறிவிப்பிற்கு தகுந்தாற்போல திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்