தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை – கேரள அரசு உத்தரவு!!

0
தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை - கேரள அரசு உத்தரவு!!
தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை - கேரள அரசு உத்தரவு!!
தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை – கேரள அரசு உத்தரவு!!

கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான தேக்கடியில் தற்போது பயணிகள் வருவதற்கும், படகு சவாரி, யானை ஏற்றம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கேரளாவில் தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல வித தடைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மே மாதம் துவங்கியுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு என்று பலரும் செல்வது சுற்றலா தலங்களுக்கு தான். கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் என்று கூறினால் அது, தேக்கடி தான். அந்த வகையில் இம்முறை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இன்று முதல் தேக்கடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா – கூடுதல் பொறுப்பு வழங்கல்!!

அதேபோல் அங்கு உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்திற்கும் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தேக்கடியில் மக்கள் மேற்கொள்ளும் படகு சவாரி, யானை சவாரி, மலை ஏற்றம் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவினை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தடை உத்தரவு தனியார் சுற்றலா உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றலா மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!