கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – குவியும் மக்கள் கூட்டம்!
கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 மாதத்திற்கு பிறகு கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலம்:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து நோய்த்தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது நோய்த்தொற்று பரவும் விகிதம் குறைந்து வந்ததன் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய பவுலர்கள் அசத்தல்! இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
அதனை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், குரங்கு அருவி, டாப்சிலிப் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கொரோனா காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த இந்த பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு!
இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்துள்ளனர். தற்போது டாப்சிலிப் பகுதியில் உள்ள அரசு தங்கும் விடுதிகளுக்கும் ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி யானை சவாரி மற்றும் மலையேற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திறப்பதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.