தமிழகத்தில் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா – அமைச்சர் மதிவதனன் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் மக்கள் பயணிக்கலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து, தொழிலகங்கள், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டது. பொதுமக்களின் அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டும் இ-பதிவு மற்றும் இ-பாஸ் பெற்று பயணிக்க அரசு அனுமதி அளித்திருந்தது.
பீகாரில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் படிப்படியான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. தொழிலகங்களும் மீண்டும் செயல்பட ஆரம்பிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தமிழக அரசு ஜூலை 5ம் தேதியான இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, தமிழகத்தில் இனி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவதனன் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து சுற்றுலா தலங்களிலும் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பயணிகளின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.