MBBS படிப்புகளுக்கு நிலவும் கடும் போட்டி – அதிர்ச்சியில் மாணவர்கள்!
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ் படிப்பு:
இந்தியாவில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தற்போது தொற்று குறைவால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பு இடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை: மாலை நிலவரத்திலும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அதன்படி மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 92 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் அரசு கல்லூரிகளிலும், 44 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,225 மருத்துவ இடங்களும், 32 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5,500 இடங்களும் உள்ளன.
Exams Daily Mobile App Download
தமிழ்நாட்டில் 72 கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 10,725 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. மேலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு புதிய இடங்கள் உருவாக்கப்படவில்லை. புதிய கல்லூரிகளும் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.