இந்தியாவில் ஒரே நாளில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா – 2,812 பேர் பலி!!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3.52 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர 2,812 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று:
உலகமே எதிர்பாராத அளவுக்கு கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோர் நோய் தாக்கத்துக்கு ஆளாகின்றனர். இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகளவு நோய் பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த மோசமான காலத்தை எதிர்கொள்ள பல நாடுகள் இந்தியாவுடன் கை கோர்த்துள்ளது. இருந்தாலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் வேண்டுதலாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி,
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு தடை நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
- கடந்த ஒரு நாளில் 3,52,991 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளது.
- நோய்த்தொற்றால் 2812 பேர் பலியாகியுள்ளனர்.
- இதன் மூலம் நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்று மட்டும் 2,19,272 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- இதனால் நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,04,382 ஆக அதிகரித்துள்ளது.
- மருத்துவமனையில் தற்போது வரை 28,13,658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 82.62% ஆகவும், உயிரிழந்தோர் சதவீதம் 1.13% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 16.25% ஆகவும் உள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 14,19,11,223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.