நாடு முழுவதும் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா – 1,619 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,73,810 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி கடந்த நாட்களை விட பலி எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருகிறது.
கொரோனா பரவல்
இந்தியா முழுவதும் கடந்த நாட்களை விட கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. நோய் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2,73,810 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை ஆகிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா புதிய பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,50,61,919 ஆக உயர்ந்துள்ளது.
JEE MAINS தேர்வுகள் ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!
நேற்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,619 ஆக உள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நோய் தொற்றிலிருந்து 1,44,178 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,29,53,821 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 19,29,329 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.