இந்தியாவின் முன்னணி 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் – 91 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!
இந்தியாவில் உள்ள 4 முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் சுமார் 91 ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாக சி.எம்.ஐ.இ (CMIE) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காரணமாக பலர் வேலையிழந்த சூழலில், பல முன்னணி நிறுவனங்கள் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழிநுட்பத்தில் முன்னணி 4 நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், எச்.சி.எல்., விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு பல இளைஞர்களுக்கு வேலை வழங்கியது.
கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் – நேர்காணல் தேர்வு!!
அதன்படி இந்த ஆண்டும் இந்த 4 நிறுவனங்களும் இணைந்து 91 ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், 40 ஆயிரம் பேருக்கு இந்த நிதியாண்டில் வேலை வழங்கியுள்ளது. இதே எண்ணிக்கையில் அடுத்த கல்வியாண்டில் வேலை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இரண்டாவதாக இன்போசிஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 24 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கியது, இந்த ஆண்டு அதை விட 15 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.சி.எல் நிறுவனமும் கடந்த ஆண்டை போல அடுத்த ஆண்டும் 15 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கவுள்ளது. கடைசியாக விப்ரோ நிறுவனம் ஆட்கள் தேவையை பொறுத்து கடந்த ஆண்டை விட அதிக வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job applying
It’s very useful
I am Ajay I completed the BSC SOFTWARE COMPUTER SCIENCE I want job for related this field