நாளை (ஜூலை 12) பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – அரசு அதிரடி!
இந்த ஆண்டு ஈத்-எல்-கபீர் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) மற்றும் நாளை (ஜூலை 12) என இரு தினங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈத்-எல்-கபீர் கொண்டாட்டத்தை முன்னிட்டு நைஜீரியாவில் இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஈத்-எல்-கபீர் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளை பொது விடுமுறை தினங்களாக அந்நாட்டின் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சின் நிரந்தர செயலாளர் டாக்டர் ஷுஐப் பெல்கோர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில், ‘இந்த ஆண்டு ஈத்-எல்-கபீர் கொண்டாட்டத்தை கடைபிடிக்கும் விதமாக ஜூலை 11 மற்றும் ஜூலை 12 ஆகிய தினங்கள் பொது விடுமுறையாக கடைபிடிக்கப்படும். இப்போது முஸ்லிம்களுக்கு ஈத்-எல்-கபீர் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளையில், இந்த கொண்டாட்டத்தின் போது சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் குற்றச் செயல்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, சட்ட அமலாக்க நிறுவனங்களுக்காக N-Alerts பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொண்டால் மக்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நைஜீரியர்கள் தங்களைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து கண்டறிந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் ரவுஃப் அரேக்பெசோலா வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.