உங்க ஊரிலும் நாளை (செப்டம்பர் 23) பவர் கட்டா? – முழு விவரம் இதோ!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ள காரணத்தால் நாளை அங்கு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக முன்னறிவிப்பு செய்யப்பட்டு மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. உடனடியாக மின் இணைப்பு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அனைத்து தொழிலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 23ம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பொங்கலூா், எல்லப்பாளையம் புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தை தாக்கும் பன்றிக்காய்ச்சல் – பரிசோதனை தீவிரம்! சுகாதாரத்துறையின் முக்கிய முடிவு!
Exams Daily Mobile App Download
மேலும், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், கெங்கநாயக்கன்பாளையம், மாதப்பூா், பொங்கலூா், காட்டூா் , தொட்டம்பட்டி மற்றும் எல்லப்பாளையம் புதூா் துணைமின் நிலையத்தை சேர்ந்த ஒலப்பாளையம், காங்கேயம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்