மதுரையில் நாளை (செப்.30) பவர்கட் – முக்கிய அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் இயந்திரங்கள் அனைத்திலும் பழுது நீக்குதல் மற்றும் தேவையற்ற மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக குறிப்பிட்ட மணி நேரம் மட்டும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னறிவிப்பும் முறையாக செய்யப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நாளை (செப்.30) குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ம் தேதியான நாளை மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பதியில் களைகட்டும் பிரமோற்சவ விழா – இரு சக்கர வாகனங்களுக்கு தடை! தேவஸ்தானம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு,கரடிகல், டி.மேட்டுப்பட்டி, தெத்தூர், ராம கவுண்டன்பட்டி, வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மறவர்பட்டி, போன்ற பகுதிகளிலும், மேலும், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வி.எஸ்.நகர், பாலமரத்தான் நகர், பழனியாண்டவர் கோவில் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்