கனமழை எதிரொலி – நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை (நவ.11) திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வரும் வேளையில் நேற்று தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அப்பகுதி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை (நவ.11) தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
4 மாவட்டங்களுக்கு நவம்பர் 22, 25 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு – தேர்தலால் சண்டிகர் அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
அத்துடன் நவ.11,12ம் ஆகிய இரு தினங்களுக்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை (நவ.11) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.