தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எங்கெங்கு தெரியுமா?
தமிழகத்தில் நாளை அக்டோபர் 12ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் தகுந்த முன்னறிவிப்போடு செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளும்போது தேவையற்ற முறையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் மின் தடைகள் தவிர்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை அரசரடி மற்றும் கப்பலூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ( புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் இனி பணிக்கு சிக்கல் தான்!
Exams Daily Mobile App Download
மின்தடை பகுதிகள்:
ஹார்விபட்டி, ஜே. ஜே. நகர், சுந்தர் நகர், அமைதி சோலை, எஸ்ஆர்வி நகர், லயன் சிட்டி, துர்கா நகர், சௌபாக்கியா நகர், பாரதியார் மெயின் ரோடு ஒன்று மற்றும் இரண்டாவது தெருக்கள், நாவலர் நகர் ஒன்று முதல் மூன்று தெருக்கள், சுப்பிரமணியர் தெரு, கண்ணதாசன் தெரு, ஜவகர் மெயின் ரோடு ஒன்று முதல் ஐந்து தெருக்கள், குமரன் தெரு, பொன்மேனி கிழக்கு தெரு, பொன்பாண்டி தெரு, ராமையா தெரு, மீனாட்சி நகர் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், வால்மீகி தெரு, திருவள்ளுவர் தெரு, அருணாச்சலம் தெரு, ஜானகி நாராயணன் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, எஸ் எஸ் காலனி வடக்கு வாசல், பொன்மேனி மெயின் ரோடு, டிஎஸ்பி நகர், சொக்கலிங்க நகர் 1 முதல் 9வது தெரு.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்