நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை – நாளை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
இந்திய பிரதமர் மோடி அவர்கள் நாளை ஒரு நாள் பயணமாக கர்நாடகா செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை அம்மாநில தலைநகரான பெங்களுருவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
வந்தே பாரத் ரயில்:
இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இத்திட்டம் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தலைநகர் டெல்லி மற்றும் வாரணாசி இடையே தொடங்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து இரண்டாவது வந்தே பார்த் ரயில் டெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி இடையே இயக்கப்பட்டது. மூன்றாவதாக குஜராத் தலைநகர் காந்திநகர் – மும்பை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 4-வது வந்தே பாரத் ரயில் இமாச்சல பிரதசத்தில் தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் 5-வதாக கர்நாடகா மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் தொடக்கப்படவுள்ளது.
நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – இடி, மின்னலுடன் கனமழை தொடரும்!
Exams Daily Mobile App Download
இந்த ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக நாளை (நவ.11) பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்லவுள்ளார். பிறகு அன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் சென்று அங்கு சென்னை – மைசூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். இது தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.