தமிழகத்தில் நாளை (ஜூலை 24) கொரோனா தடுப்பூசி முகாம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு தடுப்பு பணிகளால் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் எனும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி பற்றி பரவிய தவறான தகவல்களால் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அதன் பிறகு அரசின் விழிப்புணர்வாலும் சுகாதாரத்துறையின் முயற்சியாலும் மக்கள் செலுத்த தொடங்கினர்.
Exams Daily Mobile App Download
தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது வரை சென்னையில் நடைபெற்ற 31 மெகா தடுப்பூசி முகாம்களில் 39,32,113 கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது 32 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன் படி ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகில் நாளை (ஜூலை 24) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மேயர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.