மருத்துவதுறையில் பணியாற்ற அரிய வாய்ப்பு – நாளை (ஜன.27) வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மருத்துவ துறையில் வேலை வாய்ப்பை தேடி வருவோர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலைப்பற்றோர்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம் மூலம் தற்போது ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஜன.26) விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரிச்சட்டத்தில் மாற்றம் – சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு!
Follow our Instagram for more Latest Updates
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு B.Sc., Nursing, B.SC., Life Science , BSC., biology, botany biochemistry, micro microbiology G.N.M.,-A.N.M.,-D.M.L.D உள்ளிட்ட கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,435 வழங்கப்படும். அடுத்தாக டிரைவர் பணியிடத்திற்கு ஓட்டுநர் உரிமம் பேட்ஜ் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக 15, 235 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் முகாமில் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.