தமிழக பள்ளி மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை – விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்!
தமிழ் மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
திறனறித்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவிய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தான் கல்வி கற்று வந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளியானது அதிகரித்தது. இதனை சரி செய்யும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி வளர்ச்சியை ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்சி உள்ளிட்ட பள்ளி மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM- KISAN திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – அதிர்ச்சி தகவல் வெளியீடு!
இந்த தேர்வானது கொள்கை குறி வகையில் 10ம் வகுப்பு தமிழ் பாட தரத்தில் வினாக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான விண்ணப்பபதிவு நாளையுடன் (செப்.09) முடிவடைய உள்ளது. மேலும் தேர்வு அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்