நாளை (ஆக.09) மொஹரம் பண்டிகையை ஒட்டி விடுமுறை – புதுவை அரசு அறிவிப்பு!
இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமான மொஹரம் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால் மொஹரம் பண்டிகை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் 4 புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வரிசையில் நிற்க தேவையில்லை! புதிய வசதி!
அந்த வகையில் அன்றைய தினம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நிலையில் புதுச்சேரியிலும் மொஹரம் பண்டிகையை மக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள். அது குறித்து புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன் படி கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (ஆகஸ்ட் 9) மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறைக்கு பதிலாக வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும் என அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மொஹரம் பண்டிகை அன்று பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சரியானதை அடுத்து மக்கள் பண்டிகையை விமர்சையாக கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர்.