தமிழகத்தில் நாளை (ஆக.3) பள்ளி, கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 3 அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதை குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். மேலும், குறிப்பிட்ட பணியாளர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் என்ற விவரத்தையும் கூறியுள்ளார்.
உள்ளூர் விடுமுறை :
உலக அளவில் கடந்த இரண்டு வருட காலமாக பரவி வந்த கொரோனா வைரசால் நாட்டில் பல கட்டுப்பாடுகளும், விதிகளும் அமலாக்கப்பட்டு அனைத்தும் தலைகீழாக மாறியது. தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வாகி, பரவலின் தாக்கமும் ஓரளவு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால் மீண்டும் பழைய நிலையில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பிறந்தாலே அனைவரது நினைவுக்கும் வருவது திருவிழாக்கள் தான். முக்கியமாக அம்மனுக்கு உகந்த நாளாக மக்கள் கருதுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அப்பேற்பட்ட ஆடி மாதத்தில் முக்கிய நாளான ஆடி 18 அன்று தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா தான் ஆடிப்பெருக்கு. அந்த நாளில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் கொண்ட புனிதமான காவிரி நீரில் நீராடினால் அவரவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று முன்னோர்கள் சொன்ன வழியை பக்தர்கள் பின்பற்றுவார்கள். இத்தகைய பெருமைக்குரிய அந்நாளில் உள்ளூர் விடுமுறை அழிக்கப்படுவதை குறித்து மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்
வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி அதாவது தமிழ் மாதத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் அந்த திருநாளை முன்னிட்டு தர்மபுரி மக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியுள்ளார். மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 27 சனிக்கிழமை அன்று பணி நாளாகவும் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாவட்டம் என சொல்லுங்கடா. அதென்ன தமிழகம் முழுவதும்