தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வருகிற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தனியார் துறை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அத்துடன் டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு? அதிர்ச்சியில் பொது மக்கள்
அத்துடன் தனியார்த்துறை நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தொகுப்பு, மற்றும் தங்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 0461 2340159 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.