தமிழகத்தில் மீண்டும் 100 ரூபாயை எட்டிய தக்காளி விலை – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக காய்கறி விலையானது ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது காய்கறி வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
காய்கறி விலை அதிகரிப்பு:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகின்றது. அதனால் தமிழகத்திற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஏனெனில் தமிழகத்திற்கு பெரும்பாலான காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! வதந்திக்கு அரசு விளக்கம்!
ஏற்கனவே கடந்த சில தினங்களாக கனமழை காரணமாக காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. பின்னர் மழை குறைவு காரணமாக காய்கறி விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் காய்கறி வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் 1 கிலோ தக்காளியின் விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் விளக்கம்!!
மேலும் பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.180 க்கும், கத்திரிக்காய் 1 கிலோ ரூ.80, தக்காளி கிலோ ரூ.80 க்கும், வெங்காயம் ரூ.36 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெண்டைக்காய் ரூ.70 க்கும், அவரைக்காய் ரூ.80 க்கும், கருவேப்பிலை 1கட்டு ரூ.50 க்கும், பீர்க்கங்காய் மற்றும் கோவக்காய் ரூ.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.