தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை – விலை குறைப்பு குறித்து அமைச்சரின் ஹாப்பி நியூஸ்!
தக்காளியின் விலை கடந்த இரண்டு வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. வெளிச்சந்தைகளில் மட்டுமே ரூ.120 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் விலையை குறைக்க தமிழக அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தக்காளியின் விலை:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா முதலிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறிகளின் வரத்தும் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் வெளி சந்தைகளில் அனைத்து காய்கறிகளுமே இரட்டிப்பு விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறிகளை விட தக்காளியின் விலை தான் மிகவும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெளி சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை இறுதி காலஅவகாசம்!
இந்த வாரம் அதையும் தாண்டி ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.120 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் பெய்த பருவமழையின் போதும் இதே போல தான் தக்காளியின் விலை மிகவும் அதிகரித்தது. அப்போது கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக 150 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி பெறப்பட்டு வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதே போல இந்தாண்டும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக தக்காளி பெறப்பட்டு வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளிச்சந்தைகளில் தக்காளியின் விலை குறையும் வரைக்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ரேஷன் கடைகள் வாயிலாகவும் தக்காளியை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிடைக்கும் அனைத்து காய்கறிகளையும் வாங்கி பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.