Tokyo Paralympics 2020: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன்? மக்கள் எதிர்பார்ப்பு!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற உள்ள ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொள்ள இருக்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உயரம் தாண்டுதல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜப்பானில் தற்பொழுது கொரோனா பேரலை தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பலரும் பதக்கத்தை குவித்து வரும் வேளையில் நேற்று (ஆகஸ்ட் 30) கூட இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச மிக்சி – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
இதில் 2 தங்கப் பதக்கங்களும் அடங்கும். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) 8 ஆவது நாளாக துவங்க இருக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இவர், தங்கப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்திருந்தார். அதனால் இம்முறையும் தமிழக வீரர் மாரியப்பன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பாராலிம்பிக் போட்டிகளின் துவக்கத்தில் இந்திய அணிக்கான கொடியை ஏற்ற இருந்த வீரர் மாரியப்பன், சில காரணங்களுக்கான அந்த வாய்ப்பை இழந்தார். இருப்பினும் உயரம் தாண்டுதல் டி(63) போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ள அவர், இன்று (ஆகஸ்ட் 31) மாலை 3.55 மணிக்கு நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்பார். இந்த போட்டிகள் தூர்தர்ஷன் மற்றும் DD ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.