Tokyo Paralympics High Jump – வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீன் குமார்!
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டிகளில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி வென்று சாதனை படைத்துளளார். இதனால் இந்தியா 11 பதக்கங்களுடன் பட்டியலில் 36வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பாராலிம்பிக்ஸ்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி பதக்கங்களை வரிசையாக குவித்து வருகிறது. ஏற்கனவே 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதில் தற்போது ஒரு வெள்ளி கூடுதலாக சேர்ந்துள்ளது. இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். பைனலில் 2.07 மீ தாண்டி சாதனை படைத்துள்ளார்.
வெளிநாட்டு பயணிகளுக்கு செப்.30 வரை விசா நீட்டிப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
18 வயதான பிரவீன் குமார், தனது முதல் பாராலிம்பிக்கில் போட்டியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரேட் பிரிட்டனின் ஜொனாதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளி 2.07 மீட்டர் தாண்டி புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியா 11 பதக்கங்களுடன் பட்டியலில் 36வது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் சீனா 77 தங்கம், 46 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் என மொத்தம் 167 பதக்கங்களுடன் உள்ளது. வெள்ளி வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tokyo Paralympics 2020 – பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் பிரமோத் பகத்!
மறுபுறம் இந்திய வீராங்கனை அவனி லேகாரியா 50 மீ ரைபிள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க உள்ளது. ஏற்கனவே தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.