Tokyo Paralympics 2020: தங்கம் வென்றார் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பேட்மிண்டன் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு இதுவரை 15 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று காலை (செப்டம்பர் 4) நடைபெற்ற துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்தது.
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – துருக்கி அரசு உத்தரவு!
இதில் ஒரு தங்கப்பதக்கத்துடன், வெள்ளி பதக்கமும் அடங்கும். இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 4) மாலை நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தங்கப்பதக்கம் உறுதியாகியுள்ளது. அதன் படி, ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரர் பிரமோத் பகத், பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் டேனியன் என்பவரை 2 – 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 16 ஆவது பதக்கம் உறுதியாகியுள்ளது. பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பாக, இந்திய வீரர் பிரமோத் பகத், ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SL 3 பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசுகி புஜிகராவை 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார். தற்போது இறுதி போட்டியில் இவர் தங்கம் வென்றதன் மூலம் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.