Tokyo Olympics Men’s Hockey Semi Final – இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற போட்டியில் தனது இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டு இந்திய அணி தோல்வியுற்றுள்ளது.
இந்திய அணி தோல்வி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் சுமார் 145 உலக நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இப்போட்டியில் நடைபெறும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். இதனிடையே இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களுடன் தரவரிசையில் 62 ஆவது இடத்தில் உள்ளது.
ஆகஸ்ட் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) துவங்கியுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் கலந்துகொள்ளும் தடகளம், ஹாக்கி, மல்யுத்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வீரர்களுடன் மோதியது. இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 3) காலை 7 மணியளவில் துவங்கிய இப்போட்டியில், முதல் அரை நேரம் வரை, 2-2 என்ற கோல் கணக்கை இரண்டு அணிகளும் பெற்றிருந்தன.
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
இறுதியில், பெல்ஜியம் 5-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சுமார் 49 வருடங்களுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த நிலையில் இன்று பெல்ஜியத்திடம் தோல்வியுற்றது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.