டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு – பதக்கங்களுடன் ஜொலித்த இந்தியா!
ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்கள் பெற்று வரலாறு படைத்துள்ளது .
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்
கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்தது .இதில் 203- க்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கள் நாடுகளுக்கு பெருமை சேர்த்தனர் .இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா பதிவு செய்தது. குறிப்பாக, 2012 -ல் லண்டனில் நடைபெற்ற போட்டியில் 6 பதக்கங்கள் வென்றதே சாதனையாக கருதப்பட்டது. இதை முறியடிக்கும் விதமாக இந்த ஆண்டில் 7 பதக்கங்கள் வென்று இமாலய சாதனை படைத்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறப்பு – அதிகாரிகள் உத்தரவு!
இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என்பது குறிப்பிட தகுந்தது. இந்த சாதனையில் ஹரியானாவை சார்ந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதோடு சேர்த்து மணிப்பூரின் மீராபாய் சானு பளுதூக்குதலிலும், ஹரியானாவை சார்ந்த ரவிகுமார் தஹியா மல்யுத்த போட்டியிலும் வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினார். இது மட்டுமில்லாமல், பேட்மிட்டன் போட்டியில் ஹைராபாத்தை சேர்ந்த பி.வி. சிந்து, குத்துச் சண்டை போட்டியில் அசாமைச் சேர்ந்த லவ்லீனா போர்க்கோஹெய்ன், மல்யுத்த போட்டியில் ஹரியானாவை சார்ந்த பஜ்ரங் புன்யா வெண்கலப் பதக்கங்களை தங்களாதாக்கி கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
குழு விளையாட்டு போட்டியில் ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கல பதக்கம் ஜெயித்து 41 ஆண்டுகளாக இருந்த பதக்க கனவை நனவாக்கியது. பதக்க பட்டியலில் முதல் மூன்று இடங்களை அமெரிக்கா ,சீனா ,ஜப்பான் போன்ற நாடுகள் வென்றது குறிப்பிட தகுந்தது. இதிலே நம் நாடான இந்தியா 46-வது இடத்தை பெற்று தனி வரலாறை படைத்திருக்கிறது. இப்படியாக இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பதக்கங்களுடன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.