Tokyo Olympic போட்டி – பேட்மிண்டன் 2வது சுற்றில் பி.வி சிந்து வெற்றி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பி.வி.சிந்து, 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி:
ஒவ்வொரு ஆண்டும் டோக்கியோ நகரில் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் போட்டியானது, இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்குபெற்று வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவிற்கான முதல் ஒலிம்பிக் பரிசை (வெள்ளி), பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்ட மீராபாய் சானு பெற்று தந்துள்ளார். இதனிடையே நேற்று (ஜூலை 27) 5 ஆவது தினத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர். தவிர பெண்களுக்கான குத்துசண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!!
பேட்மிண்டன் ஆண்களுக்கான போட்டியில் இந்திய அணி கால் இறுதி வாய்ப்பை தவர விட்டது. இதனிடையே இன்று (ஜூலை 28) துவங்கியுள்ள 6 ஆம் நாள் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் போட்டியிட்ட பி.வி.சிந்து, 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்குடன் மோதிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அவரை 21-9, 21-6 செட் கணக்கில் தோற்கடித்துள்ளார்.