டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள் 30 வினாடி முக கவசத்தை நீக்கலாம் – ஐ.ஓ.சி அனுமதி!
கடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க விழாவின் போது வீரர்கள் 30 வினாடிகள் முககவசத்தை நீக்கி கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்:
ஒலிம்பிக் போட்டிகள் 2020ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் 2021ம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. நடப்பாண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் போட்டிகள் நடப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜப்பானிய தலைநகரான டோக்கியோ நகரின் இந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகள் அனைத்தும் தீவிர நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன், பார்வையாளர்களை தவிர்த்து நடத்தப்படுகிறது.
வன்னியர்கள், சீர்மரபினர் சிறப்பு ஒதுக்கீடு – தமிழக அரசு ஆணை வெளியீடு!!
ஜூலை 23ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அவற்றில், இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல சுகாதார நெறிமுறைகளை வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
அவற்றில், வெற்றி பெற்ற வீரர்கள் பதக்கமளிக்கும் போது கூட முககவசத்தை நீக்க கூடாது என்பது போன்ற முக்கிய கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, வீரர்கள் அவர்களின் வெற்றி தருணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறர்கள் என்பதை உணர்ந்தது. இதனால், வீரர்கள் அவர்களின் பதக்க விழாவின் போது புகைப்படங்களுக்காக 30 வினாடிகள் முககவசத்தை நீக்கி கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.