வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள், டீசல் விலை 34 காசுகள் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை:
தற்போது பொதுமக்களிடையே வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் பொருளாதார நெருக்கடி அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – யார் யாருக்கு கிடைக்கும்? கணக்கீடு விவரங்கள்!
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106 க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100 க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய தரவுகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இன்று வரை 17 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.
கொரோனா மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!
அதன் அடிப்படையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையில் 30 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.31க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.98.92ல் இருந்த டீசல் விலையானது 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.99.26க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.