பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கோபியுடன் செல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” தொடரில் சுவாரஸ்யமான பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய எபிசோடில் கோபியின் நண்பர் நிகழ்ச்சிக்கு செல்ல ராதிகாவை அழைக்கிறார். ஆனால் பாக்கியா தானும் உடன் வருவதாக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு பாக்கியா பல விதமான உணவுகளை தயாரித்து அசத்துகிறார். கோபி ராதிகாவை தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க ராதிகா மறுக்கிறார். ஆனால் கோபி பிடிவாதமாக வர வேண்டும் என தெரிவிக்கிறார். உடனே ராதிகா ஒத்துக்கொள்ள கோபி தனது வீட்டிற்கு செல்கிறார். கோபியுடன் பாக்கியா தானும் உடன் வருவதாக அடம் பிடிக்கிறார். பாக்கியாவை வராமல் தடுக்க கோபி சமாளிக்க செய்கிறார்.
TNUSRB காவலர் உடல் தகுதித்தேர்வு நாளை மறுநாள் தொடக்கம் – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
ஆனால் பிடிவாதமாக பாக்கியா வருவேன் என பிடிவாதம் செய்ய, அவருடன் இனியாவும் கிளம்புகிறார். இனியா பார்ட்டிக்கு என்ன டிரஸ் போட வேண்டம் என கேட்கிறார். இருவரும் ரெடியாக, ஸ்கூலில் மயூரியை அவரது தந்தை சந்திக்கிறார். வழக்கம் போல பிடிக்காமல் பேச மயூரா ஆட்டோ கிளம்ப போகுது என்று சொல்கிறார். ஏன் என்கிட்ட பேசாம இருக்க என்று அவரது அப்பா கேட்க நீங்க குடிப்பிங்க குடிச்சுட்டு சண்டை போடுவீங்கன்னு சொல்றா, அதனை கேட்ட ராதிகா கணவர் அந்த கோபி தான் எல்லாத்துக்கும் காரணம் கோபி இல்லைனா நாம சந்தோசமா இருக்கலாம் என கூறுகிறார்.
கோபி ராதிகாவை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என யோசனை செய்யும் போது, தனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு பார்ட்டிக்கு வர முடியாது என ராதிகா சொல்கிறார். கோபி இதான் சான்ஸ் என ஆமா மீட்டிங் தான் முக்கியம் என கூறுகிறார். அப்போது மயூரி வர கோபியை பார்த்ததும் டென்ஷன் ஆகிறாள். வெளியே வந்து நிற்க அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருக்குற ஆளு உன் அப்பாவானு கேட்டதும் மயூரிக்குகு கோபி மீது கோபம் வருகிறது. அனைவரும் பார்ட்டிக்கு சென்று பாக்கியாவை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியுமா? ஆணையம் விளக்கம்!
அப்போது கேக் வெட்டிய பிறகு பாக்கியா செய்த பலகாரங்களை அனைவரும் சாப்பிட்டு, நன்றாக இல்லை என குறை கூறுகின்றனர். உடனே கோபி கோபமடைய, இது நார்த் சைடு சாப்பாடு போல இல்லை எனவும் கூறுகின்றனர். உடனே கோபிக்கு கோபம் அதிகமாக வருகிறது, பாக்கியா அடுத்து என்ன நடக்கும் என பயத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.