தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை – உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை - உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை - உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை – உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த காலநிலை அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் குளிரால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பனி கொட்டித்தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. வட மாநிலத்தை தொடர்ந்து தென் மாநிலமான தமிழகத்திலும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

சரியும் வேலைவாய்ப்பு.. 2023ல் TCS, Infosys, HCL நிறுவனங்களில் பணியமர்த்தல் கூடுமா? நிபுணர்களின் கணிப்பு இதுதான்!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இன்று (17.01.2023) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் டிச. 17,18, 19, 20, 21 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாக இருக்கக்கூடும்‌.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மலைப்பகுதிகளில்‌ மட்டும் இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனி நிலவ வாய்ப்புள்ளது. அடுத்தாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!