தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (மார்ச் 08) முதல் மார்ச் 10ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeWantGroup4Results!
அதனை தொடர்ந்து காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக பிப்ரவரி 12ஆம் தேதி புதுவை, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 – 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 22 – 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்க கூடும் என்று வானிலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.