இன்று (அக்டோபர் 25) அபூர்வ சூரிய கிரகணம்.. சென்னையில் எப்படி தெரியுது பாருங்க!
இந்தியாவில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்தனர். அதன்படி இன்று நாடு முழுவதும் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து வருகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழகத்தில் சூரிய கிரகணமானது சரியாக 5.14 மணிக்கு தொடங்கியது.
சூரிய கிரகணம்:
பூமி மற்றும் சூரியனுக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சந்திரனின் ஒரு பகுதி மட்டும் சூரியனை மறைக்கிறது. இந்த கிரகணத்தை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை சந்திரன் மறைப்பது போல தென்படும். நடப்பாண்டு அக்.25ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். ஐரோப்பாவின் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் கிரகணத்தை தெளிவாக பார்க்க முடிகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதே போல இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இதனை காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோளரங்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கிரகணத்தை காண ஆர்வமுடன் திரண்டனர்.
குறைந்து வரும் ஊழியர் வைப்பு நிதி அமைப்பு பயனர்கள் – அறிக்கை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இதனை வெற்று கண்களால் காண கூடாது என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனால் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக மக்கள் பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சூரியனின் 8 % பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனா்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்