தமிழகத்தில் TNUSRB எழுத்துத்தேர்வு – இன்று துவக்கம்! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று (நவ.27) தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TNUSRB PC :
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு காவல்துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தங்க நகைகள் வாங்க போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!
அதன் படி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக தகுதியானோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த விண்ணப்பபதிவுகள் நிறைவடைந்த பிறகு இப்பணிக்கான எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இத்தேர்வானது மதியம் 12.40 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் செல்போன், ஸ்மார்ட் வாச், புளூடூத் போன்றவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதாக செல்ல ஏதுவாக போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.