உச்சம் தொட்ட தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்… 40,000 தாண்டிய சவரன்!
தமிழகத்தில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இன்று நகைகள் வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
கடந்த ஒரு மாத காலமாக பங்கு சந்தை ஏற்றம் அடைந்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. அதனால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வழக்கமாக சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமே தங்கத்தின் விலையானது அதிகரிக்கும். ஆனால் தற்போது சாதாரண தினங்களிலேயே நகை விலை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.152 உயர்ந்து ரூ.39,640-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று (டிச.02) காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 அதிகரித்து ரூ. 40,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக ஒரு சவரன் 39,000 என்ற விலையிலேயே தொடர்ந்திருந்த நிலையில் தற்போது ரூ.40,000 தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1,500 ஊக்கத்தொகை அளிக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – 1500 மாணவர்களுக்கு ஜாக்பாட்!
Exams Daily Mobile App Download
மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.5,010க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தால் மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குவதில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.