குட் நியூஸ்.. சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகை வாங்குற ஐடியா இருந்தா உடனே கிளம்புங்க!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மக்கள் தங்க நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த மாதம் உயர்த்தியது. இதனால் ஆபரணத்தங்கத்தின் விலை மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. அதே போல ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வால் தங்கம் விலை உச்சத்தை தொட்டது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை போல தங்கத்தின் விலையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் பெண்கள் நகைப்பிரியர்கள் , திருமணத்திற்கு நகை வாங்குவோர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் எப்போது தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்தனர்.
தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? – வானிலை மையம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இன்று தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.39,080க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 20 குறைந்து ரூ. 4,885 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 67.00 ரூபாயாக இருந்து வருகிறது.