வானிலை அலர்ட்.. தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை – அறிக்கை வெளியீடு!
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 30ம் தேதி வரை மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரவு, பகலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும். அதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்