தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பகல் முழுவதும் அதிகரித்து வந்தாலும் மாலை வேளைகளில் சில இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது. கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாக இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். எனவே மக்கள் தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர் சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகள் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
05.04.2021 முதல் 07.04.2021 வரை:
கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட ‘3 முதல் 5’ டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்ற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயலப்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
TN Job “FB Group” Join Now
மேலும் வளிமண்டலத்தில் 1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
06.04.2021 முதல் 08.04.2021: தமிழகம் மட்டும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – விபரங்கள் அனுப்ப உத்தரவு!!
9.04.2021: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக சேலம் மாவட்டத்தில் 3 செ.மீ மழை பெய்துள்ளது.