தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை – டிச.5 காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை அப்டேட்!
தமிழகம் மற்றும் புதுவையில் டிச. 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.2ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அதாவது டிச.6ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் டிசம்பர் 5ம் தேதி அன்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் – அமைச்சர் தகவல்!
Exams Daily Mobile App Download
ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 04.12.2022 சென்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனை தொடர்ந்து டிச.5 மற்றும் 6ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இத்தகைய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.