தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 14ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையானது தமிழகம்  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். தென்கிழக்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!