தமிழகத்தில் வங்கிகள் இன்று & நாளை வேலை நிறுத்த போராட்டம் – மக்கள் அவதி!!
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளதால் ஏடிஎம் சேவைகள் முடக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகள் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். வங்கிகளில் வேலைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டால் வங்கி வேலை பறிபோகும் நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே மத்திய அரசு வங்கிகள் தனியார் மயமாக்கல் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால் மத்திய அரசு சார்பில் இந்த கோரிக்கை குறித்து எந்த பதிலும் அளிக்காத காரணத்தால் இன்று மற்றும் நாளை வங்கி ஊழியர்கள் கட்டாயம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தர உள்ளதாக தெரிவித்தனர்.
மத்திய அரசு பணிகளுக்கான செட் (CET) தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!!
இதனால் வங்கிகளில் பணபரிவர்த்தனைகள் டெபாசிட், செக் கிளியரன்ஸ் போன்ற சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம் போல் இயங்கி வரும். இருந்த போதிலும் வங்கிகள் செயல்படாத காரணத்தால் அவற்றில் பணம் இல்லாமல் போகும் நிலை உள்ளது. ஆனால் தனியார் வங்கிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இல்லாத காரணத்தால் அவை வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.