நிப்டி புள்ளிகள் உயர்வு – இன்றைய தேசிய பங்கு சந்தை நிலவரம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக பங்கு சந்தை வர்த்தகம் ஏற்றத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் NDTV நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்று தேசிய பங்கு சந்தையில் NDTV-யின் பங்குகள் திடீரென உயர்ந்துள்ளது.
பங்குகள் விலை:
டெல்லியை சேர்ந்த பிரபல டிவி சேனல் நிறுவனமான NDTV தனது பங்குகளை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளது. ஆரம்பத்தில் NDTV பங்குகளை விற்பனை செய்வதற்கு அந்நிறுவன தலைவர் பிரணாய் ராய் தயக்கம் காட்டினார். அதன் பிறகு ஒப்பந்தத்தின் காரணமாக NDTV பங்குகள் அதானி குழும கட்டுப்பாட்டுக்கு சென்றது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ராதிகா ராய், பிரணாய் ஆகியோர்கள் NDTV நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு மத்தியில் இன்று(நவ.30) காலை NDTV வர்த்தகம் தொடங்கியதும் அதன் பங்குகள் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மும்பை தேசியப் பங்குச் சந்தை நிலவரத்தில் புதிய ஏற்றத்தை அளித்துள்ளது.
3 நாட்களுக்கு பின் மக்களை அதிர்ச்சி ஆக்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
Exams Daily Mobile App Download
தொடர்ந்து 3வது நாளாக இன்றும் நிப்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி சென்செக்ஸ் 122 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தற்போது பங்கு சந்தையில் 62,804 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அத்துடன் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.