சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
ஆபரணத் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரன் ரூ.34,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தங்க விலை நிலவரம்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரை காணாத நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பினர். தொடர்ந்து மக்கள் தங்கத்திலேயே முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதன் பிறகு நாடு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியதும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 – மத்திய அரசு உத்தரவு!
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிவில் இருந்தது. இந்த நேரத்தை பயன்படுத்தி மக்கள் தங்கம் வாங்க முற்பட்டனர். அதாவது தங்கம் விலை முழுமையாக மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு குறையவில்லை. ஒரு சவரன் ரூ.35,000 என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. பண்டிகை காலம், சுபமுகூர்த்த தினங்களில் இந்த விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியத் தொகை – தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!
சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.34,808 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4355 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.34840 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,752 க்கும் விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோர் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.