தமிழகத்தின் தேனியில் தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) விடுமுறை – அதிரடி அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் மீண்டு வந்த இந்த நேரத்தில் அரசு மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு மீண்டும் பள்ளிகளை திறந்தது. அதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான பாட வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து காவல்துறைக்கும் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவியின் உடலை பரிசோதனை செய்ததில் உடலில் காயங்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 4ம் நாளாக பள்ளியில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்தை தீ வைத்து எரித்தும் பிற பொருட்களை சேதப்படுத்தியும் வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!
இதனையடுத்து அம்மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தனியார் பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதை தடுக்க கோரியும் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள், மேரி மாதா கல்வி நிறுவனங்கள், ரேணுகா வித்யாலயா உள்ளிட்ட முக்கிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மொபைல் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.