CBSE 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் – இன்று கடைசி நாள்!
இந்தியாவில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை 20க்குள் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மதிப்பெண்கள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண் முடிவுகளை தயாரிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏழு ஆசிரியர்களை உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவுறுத்தியது.
TN Job “FB Group” Join Now
இக்குழு பரிந்துரையின் பேரில் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் 20 மதிப்பெண்கள் மற்றும் ஆண்டு முழுவதும் பள்ளிகளால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் 80 மதிப்பெண்களும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டது. 80 மதிப்பெண்களில் மூன்று பிரிவுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் ஆன்லைன் வகுப்பில் பங்கு கொள்ளாத மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலான மதிப்பீட்டை நடத்துமாறு சிபிஎஸ்இ தெரிவித்தது.
ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
அதனை தொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்து அதனை சிபிஎஸ்இ இணையதளத்தில் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் குறித்த விபரங்களை இணையதளத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்கின்றன. ஜூலை 20க்குள் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.