தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடை மழை காரணமாக தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் இன்று (10-10-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால் அதற்கு மாறாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை தகவல் மையம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் நேற்று இரவில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
மத்திய அரசின் சூப்பர் திட்டம் – நீங்களும் பயனடைய இந்த விவரத்தை தெரிஞ்சுக்கோங்க!
Exams Daily Mobile App Download
இதனால் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்