தமிழக காவலர்களுக்கான புதிய செயலி – செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம்!
தமிழகத்தில் காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவலர்களுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் காவலர் என்ற மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதிலும், குற்றங்களை தடுப்பதிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பேரிடர் காலங்கள், கலவரங்கள் போன்ற நிகழ்வுகளின் போது காவலர்கள் இரவு பகல் பாராது சாலைகளில் நின்று பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர். கடந்த வருடத்தில் கோரத்தாண்டம் ஆடிய கொரோனா பெருந்தொற்றால் மக்கள் எல்லாரும் வீடுகளில் முடங்கி இருந்த போது கூட காவலர்கள் மட்டும் தொடர்ந்து பணியாற்றினர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் பலரும் தங்களது குடும்பங்களை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் காவலர்களுக்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்த அரசு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை வழங்கியது. அதனை தொடர்ந்து காவலர்களின் உடல் நலத்தை கண்காணிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரம் .. அவரச உதவி எண்கள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
அதன் தொடர்சியாக தற்போது களப்பணியாற்றும் காவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி முதன் முதலாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த செயலி மூலம் களப்பணியாற்றும் அலுவலர்கள் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை உடனடியாக உயர் அதிகாரிக்கு தெரிவிக்கலாம். அத்துடன் வேண்டிய உதவிகளையும் பெறலாம்.