உலகம் எதை நோக்கி போகுதுப்பா? இனி ATM-இல் பணம் மட்டும்மில்ல இட்லியும் வரும்.. வைரல் நியூஸ்!
உலகில் அடிக்கடி புது புது விஷயங்கள் வினோதமாக நடந்து வருகிறது. ஆனால் தற்போது நடந்துள்ள வினோதம் நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் பெங்களூரில் ‘இட்லி ஏடிஎம்’ தற்போது அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இப்படியுமா நடக்கும்:
உலகில் நாளுக்கு நாள் அதிநவீன வசதிகள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் முதல், நமது அன்றாட காரியங்கள் வரை அனைத்திற்கும் புது மாற்றங்கள் வந்துள்ளது. இது போன்ற மாற்றங்கள் நம்மை அதிக வியப்பில் ஆழ்த்தியிருக்கும். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வசதி நமது உலகம் எதை நோக்கி போகிறது என்று சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
முதலில், பசித்தால் எந்த உணவாக இருந்தாலும் அதை நாமே வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. பின்னர், ஹோட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் வந்தது. அதன்பிறகு, எந்த உணவாக இருந்தாலும் அதை வீட்டில் இருந்த படியே இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுவது பழக்கமாகி விட்டது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – தீர்வு கிடைக்குமா?
ஆனால், தற்போது உணவு வேண்டும் என்றால், எந்த வகையான உணவு வேண்டும் என்று நாம் செலக்ட் செய்தாலே போதும். அந்த உணவு ATM மெஷினில் பணம் வருவது போல் நமது கைக்கு வந்து விடுகிறது. பெங்களூரில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் “இட்லி போட்” அல்லது “இட்லி ஏடிஎம்” மெஷின் ஒன்றைத் தயாரித்து, அவற்றை இந்த உணவு விநியோக செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த இயந்திரம் பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஃப்ரெஷாட் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இரவு நேரத்தில் உணவு தேடி அலைபவர்களுக்கு இது முக்கிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்