சென்னை : ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறித்த விவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் மீதான ஆர்வம் எப்போதும் குறைவதில்லை. மேலும் தற்போது பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அத்துடன் வெளி நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,931 எனவும் சவரனுக்கு ரூ. 39,448 என விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து 4,935 ரூபாய்க்கும், அத்துடன் சவரன் ரூ. 40 உயர்ந்து 39,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.- இது தான் காரணம்!
Exams Daily Mobile App Download
ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68 எனவும், இதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இனி வரும் காலங்களில் பணவீக்கம் காரணமாக அதிகரித்து கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.